மடிப்பாக்கத்தில் தொடர் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆலந்தூர்: மடிப்பாக்கம் ராம் நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், ராஜாஜி நகர், சீனிவாசா நகர் உள்பட பல பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். உதவி பொறியாளரிடம் தொடர்பு கொண்டு மின் வாரிய அலுவலகத்திற்கு வர வைத்தனர். அங்கு வந்த பொறியாளர் மின்தடை பிரச்னையை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு