ராகுல் பேச்சில் 23 பகுதி நீக்கம்

புதுடெல்லி: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி, “பாஜ மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது,” என்று 36 நிமிடங்கள் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த உரை நாடாளுமன்றத்தின் இணையதள பக்கத்தில் வெளியான நிலையில், பிரதமரை குற்றம் சாட்டி பேசியவை, அதானியை பற்றி பேசியவை உட்பட மொத்தம் 23 பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இதில் பாரத மாதா என்று குறிப்பிட்டு பேசிய சில பகுதிகளும் அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகரால் நேற்று முன்தினம் இரவு நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல், “பாரத மாதா’’ என்ற வார்த்தை தற்போதைய இந்தியாவில் பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற, தகாத வார்த்தையாகி விட்டது போலும்,” என்று கூறினார்.

Related posts

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்

பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை