இந்நிலையில், உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ள அக்கமிட்டியின் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “நாடாளுமன்ற குழு, நிதி ஆயோக், இந்திய தேர்தல் ஆணையம் போன்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறையும் அமல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் நலனுக்கானஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இதில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை. மத்தியில் யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இது அவர்களுக்கு பலனளிக்கும். அது பாஜ அல்லது காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பலன் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.