நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது என வைகோ அறிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளன. எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கிறேன்.

Related posts

காவலர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின

சாயம் வெளுத்தது