சென்னை: பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்பட்டது. மகன் மற்றும் மருமகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், மனைவி பேபி, மகன் சங்கர், மகள் மீது மருமகள் மனோலியா வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்திருந்தார். புகார் தொடர்பாக சேலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமின் கோரி சதாசிவம், குடும்பத்தினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.