அந்த சிறுவன் பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்தவன் என்றும், அவனிடம் செல்போன் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பொட்டலம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கைது செய்யப்பட்ட அந்த சிறுவன், கல்ரா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு துறைக்கும், அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.