ஒசூர்: ஒசூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை அந்தேவனப்பள்ளியில் மழையால் மரம் சாய்ந்தபோது, பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் சிக்கினர். பைக்கில் சென்ற லோகேஷ் (45) சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஓட்டிச் சென்ற ரமேஷ் (32) படுகாயம் அடைந்தார்.