வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு: நடுரோட்டில் கார்கள் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி


வேதாரண்யம்: நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். இதையொட்டி வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பாஜ மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கு நாகை பாஜ வேட்பாளர் ரமேஷ் வருகை தந்தபோது தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.

அப்போது பட்டாசு தீப்பொறி பரவி சாலையோர புதர், பற்றி எரிந்தது. இதனால் பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விழாவில் பங்கேற்க, வேட்பாளருடன் 10க்கும் மேற்பட்ட கார்களில் நிர்வாகிகள் வந்தனர். இந்த கார்களை திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து