உங்கள் வாக்குகளில் ஒன்று தவறான கைகளுக்கு சென்றபோதெல்லாம், ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் இருக்கும், உங்கள் ஒரு வாக்கு சரியான அரசியல் கட்சிக்கு சென்றால், அராஜகம் முடிவுக்கு வந்து நம்பிக்கைக்கு மரியாதை கிடைக்கும். இன்று ராமர் அவர் பிறந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
முந்தைய அரசுகள் இந்த வேலையை செய்திருக்குமா? இன்று நாம் ஒரு புதிய சூழலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அந்த ஒரு வாக்கு தவறான இடத்திற்கு சென்ற போதெல்லாம், கப்பம் வாங்கப்பட்டது, ஆனால் அது சரியான கட்சிக்கு, சரியான கைக்கு சென்றபோது, அதன் விளைவு இப்போது பணம் பறிப்பு முடிந்துவிட்டது. பா.ஜவுக்கு தேசம் மட்டுமே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.