துபாயில் இருந்து திருச்சிக்கு பயணி கடத்திய ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உளவுத்துறை தகவலின்படி, சந்தேகப்படும்படி வந்த ஒரு ஆண் பயணியிடம் சோதனையிட்டபோது, அவர் 1081 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை பேஸ்ட் வடிவில் 3 பாக்கெட்டுகளில் வைத்து ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனி அறைக்கு அழைத்து சென்று தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதை உருக்கி எடுத்தபோது 977 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.70.58 லட்சம். தொடர்ந்து அந்த பயணியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளர் மீது கல்வீச்சு திருப்பதியில் பரபரப்பு

இன்று 75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..!!

சர்ச்சைப் பேச்சு புகாரில் பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!!