குறிப்பாக பால் ஏற்றி வரும் டேங்கர் வாகனங்களில் பாலின் தரம்? சரியாக உள்ளதா? என அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர். ஓணம் திருவிழாவிற்காக பால் அதிகளவில் தேவைப்படுகிறது, இதனால் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலமாக பால் கேரளாவிற்கு வந்தவாறு உள்ளது. இது தவிர பால், சமையல் எண்ணைள், பப்படம், பாயசம் மிக்ஸ், சர்க்கரை, நெய், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்த பின்பு அனுமதிக்கப்படுக்கின்றன. இது தவிர அதிகாரிகள் கடைகளிலும் சோதனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பதுக்கல் உள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.