நசீருக்கு 2 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு 3 ஆண்டுகளும் தண்டனை விதித்தது. இதற்கிடையே தன்னைத் தாக்கியவர்களை மன்னிப்பதாக உம்மன் சாண்டி கூறினார். இந்நிலையில் உம்மன் சாண்டியை தாக்கிய நசீர் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவரது புதுப்பள்ளி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சாண்டி உம்மனுக்கு டெபாசிட் பணம் கட்டுவதற்கு ரூ.15 ஆயிரம் பணத்தை நான் தான் கொடுப்பேன் என்று நசீரின் தாய் ஆமினா பீவி கூறினார். இதன்படி இவர் சாண்டி உம்மனுக்கு ரூ.15 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தைத் தான் சாண்டி உம்மன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்டினார்.