அப்போது முதியவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர், நடுரோட்டில் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு அய்யா, ‘’இது உங்க பணமா, கீழே கிடக்கிறது’ என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை எடுத்தபோது முதியவரின் பைக்கில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து முதியவர் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.