ஒடிசா ரயில் விபத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டர் காரணம், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படிருந்தது. இந்த பதிவு சிறிது நேரத்தில் வைரலானது. செந்தில்குமார் டிவிட்டரில் பகிர்ந்திருந்த ஸ்டேஷன் மாஸ்டர் படம் 2004ல் எடுக்கப்பட்டது. விபத்து நடந்த நிலையத்தில் அன்று பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்.பி.மொகந்தி ஆவார். இந்நிலையில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பி பதிவு வெளியிட்டதாக செந்தில்குமார் மீது திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது கலவரம் செய்ய தூண்டுதல், மதம், இனம், ஜாதி அல்லது சமூக அடிப்படையில் எழுதி வெறுப்புணர்வை தூண்டுதல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.