இந்நிலையில், விமான கட்டணங்கள் உயர்வு குறித்து விவாதிக்க ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விமான நிறுவனங்களின் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வழித்தடங்களில் விமான கட்டணம் உயர்ந்துள்ளது குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார்.கோ பர்ஸ்ட் விமானங்கள் முன்பு இயக்கப்பட்ட வழித்தடத்தில் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் சம்பவங்கள் நிகழும் போது நியாயமான கட்டணங்களையே வசூலிக்க வேண்டும். நியாயமான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஒரு நடைமுறையை விமான நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.