தகாத உறவிற்கு இடையூறு கழுத்தை நெரித்து கணவர் கொலை

*மனைவி, காதலன் கைது

கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனை வைத்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வில்லூரை சேர்ந்தவர் குருநாதன்(55). பால் விற்பனையாளர். இவர் தனது 2வது மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். குருநாதன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து குருநாதன் முதல் மனைவியின் மகன் ராமர்(37), தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வில்லூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கில் குருநாதனின் 2வது மனைவி மகாலட்சுமி, அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி(49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், வில்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணிக்கும், குருநாதனின் 2வது மனைவிக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த குருநாதன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியுடன், தனது மனைவியை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் சுப்பிரமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே மகாலட்சுமி திரும்பி வந்து, மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால், மீண்டும் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இதனை குருநாதன் கண்டிக்கவே, இவரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர். இவர்களின் திட்டப்படி, மகாலட்சுமி கோவைக்கு சென்றதும், சுப்பிரமணி கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் தனியாக படுத்திருந்த குருநாதனை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பேரையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி

82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி