பொன்னேரி: நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த சமந்தாகரிமி, தீபக் தீப் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.