புதுடெல்லி: மக்களவை தேர்தலில் டெல்லி, பஞ்சாபில் இருந்து போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் நேற்று இரவு அறிவித்தது. இதன்படி, டெல்லி வடகிழக்கு தொகுதியில் இருந்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். ஜெய் பிரகாஷ் அகர்வால், சாந்தினி சவுக் தொகுதிக்கும், முன்னாள் எம்பி.யான உதித் ராஜ் வடமேற்கு டெல்லி தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில், ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகி சில நாட்களுக்கு முன் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் எம்.பி தார்வீர் காந்தி பாட்டியாலா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 75 வேட்பாளர்களின் பெயர்களையும் காங்கிரஸ் நேற்று அறிவித்தது.