இந்த வழக்கு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து முக்கிய வழக்காக பார்க்கபட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஜெயகுமார் எழுதியதாக கிடைக்கப்பெற்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழக்கில் எந்தஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.