இதுகுறித்து, மகாராஷ்டிர தேசிய கேடட் கார்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. கல்லூரியின் முதல்வரிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட சீனியர் மாணவரை கல்லூரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் வெளியிட்ட பதிவில், ‘மாணவர்களை தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரினார்.