போபால்: மத்தியப்பிரதேசத்தின் ஜபால்பூர் நகரில் அசோக் ரெட்டி( 62) என்ற நக்சலைட்டை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். இவர் நான்கு மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இவரை பிடித்து தருபவர்களுக்கு மொத்தம் ரூ.82லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அசோக் மீது சுமார் 60 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவரை தொடர்ந்து அவரது மனைவி ராயம்தி அகா குமாரி (43) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.