பொது இடத்தில் ஆபாசமாக பேசி இளம்பெண்ணை தாக்கிய போதை ஆசாமி கைது

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (30), நேற்று முன்தினம் தி.நகர் தர்மாபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது, உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐஸ்வர்யாவை பொது இடத்தில் ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ஐஸ்வர்யாவுக்கு லேசாக காயம் ஏற்பட்டது. பின்னர், சம்பவம் குறித்து ஐஸ்வர்யா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, குடிபோதையில் இருந்த ராமச்சந்திரன் எதிர் வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரது வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவை தாக்கியது தெரியவந்தது. மேலும், ராமச்சந்திரன் மீது ஏற்கனவே பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் ராமச்சந்திரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு