இதன் நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக வெப்பம் நேற்று உயர்ந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. கடலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வலுப்பெற்று மோக்கா புயல் இன்று காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து இன்று மாலையில் மேலும் மிகத் தீவிரம் அடையும். மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அது நிலை கொள்ள வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை மாலை(13ம் தேதி) காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 கிமீ முதல் 150 கிமீ வேகத்திலும், இடையிடையே 165 கிமீ வேகம் வரை உயர்ந்து 14ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.