சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராததிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அபராத நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.