திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கர ரவுடிகளின் பட்டியலை சிறை நிர்வாகம் தயாரித்து, அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளது. சிறைக்குள் மீண்டும் கும்பல் தாக்குதல் சம்பவம் நடக்குமா? என்ற அச்சத்தில் திகார் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில் இருக்கும் கோகி கும்பலால் தில்லு தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து கைதிகளையும் தனித்தனி அறைகளுக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக சைலன்ட் மோடில் இருக்கும் 30 கைதிகள், திடீரென தங்கள் எதிரி கும்பலை தாக்கும் நடவடிக்கையில் இறங்குவதால், அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.