பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக்கவும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்தினோம். ஆனால் இப்போது தேர்தலில் பாஜ 400 இடங்களில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றி விடும் என காங்கிரஸ் வதந்திகளை பரப்பி வருகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வருவதை தடுக்கவும், அயோத்தி ராமர் கோயில் மூடப்படுவதை தடுக்கவுமே பாஜ 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கேட்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.