காங்கிரஸ் கட்சி சார்பில் கமல்நாத் முதலமைச்சரானார். ஆனால், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்.எல்-க்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான சமந்தர் படேல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியதும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் நீமுச் பகுதியில் இருந்து 1,200 வாகனங்களில், சமந்தர் படேல் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் ராகேஷ் குப்தா, பைஜ்நாத் சிங் ஆகியோரும் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். சிந்தியாவோடு பாஜகவுக்கு சென்ற பெரும்பாலானோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவதால் மத்திய பிரதேச அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.