10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிய மோடி: சீமான் சீற்றம்

நெல்லை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: ஏப். 19ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் மாறுதலுக்கானது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு, பொதுமக்களுக்கு உருப்படியான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தாறுமாறாக வரி வசூலில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இலவச கல்வி, மருத்துவம், சாலை மேம்பாட்டு வசதிகளை கூட செய்து தரவில்லை. தனது தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்போம்; கருப்பு பணத்தை ஒழிப்போம் என கூறிய பாஜ, அவற்றை காற்றில் பறக்க விட்டுள்ளது. வட மாநிலங்களில் மாட்டுக்கறியை சாப்பிட்டால் கொல்லும் அவலம் தொடர்கிறது. ஆனால், உலகத்திலேயே ஆண்டுதோறும் 24 லட்சம் டன்னுக்கும் மேலாக மாட்டிறைச்சியை ஒன்றிய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது என்றார்.

Related posts

சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், தேரோட்டம் கோலாகலம்!

மக்களவை தேர்தலில் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது