‘மோடியின் பயம் கெஜ்ரிவால்’: புதிய டிபி படத்துடன் ஆம் ஆத்மி பிரசாரம்

புதுடெல்லி: ‘மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்கிற சுய விவர படத்துடன் (டிபி) ஆம் ஆத்மி சமூக ஊடக பிரசாரத்தை தொடங்கி உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால், புதிய மதுபான கொள்கை விவகாரத்தில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி புதிய சமூக ஊடக பிரசாரத்தை நேற்று தொடங்கியது.

இது குறித்து டெல்லி அமைச்சரும், ஆம் கட்சியின் மூத்த தலைவருமான அடிசி அளித்த பேட்டியில், ‘‘அனைத்து ஆம் ஆம்தி தலைவர்களும் தொண்டர்களும் தங்களின் டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளில், ‘மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்கிற வாசகத்துடன் கெஜ்ரிவால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்ற சுய விவர புகைப்படத்தை மாற்ற வேண்டும்.

நாட்டிலேயே பிரதமர் மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது வெறும் கெஜ்ரிவாலுக்கான போராட்டம் மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்’’ என கூறினார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்