குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பீகார் வந்திருந்த மோடி பணவீக்கம் குறித்து கடுமையாக சாடியிருந்தார். வாக்களிக்க செல்லும் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டரை குமிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். பிரதமர் மோடியின் முந்தைய பேச்சை பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பியதை குறித்து தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் மோடி இத்தனை பொய்களை பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார். மக்களை திசை திருப்ப பாஜக-வினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சாடியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி ஏராளமான பொய்களை பேசியுள்ளார் என்று தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.