இதுகுறித்து மாலத்தீவு எம்பியும், முன்னாள் துணை சபாநாயகருமான இவா அப்துல்லா அளித்த பேட்டியில், ‘இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர்கள் வெளியிட்ட சர்ச்சை கருத்துகளை பகிரங்கமாக மாலத்தீவு அரசு எதிர்க்க வேண்டும். அமைச்சர்களின் கருத்து முற்றிலும் அவமானகரமானது. இந்திய பிரதமருக்கு எதிராக நமது அமைச்சர்கள் கூறிய கருத்து வெட்கக்கேடானது. இதுபோன்ற கருத்துகளை அமைச்சர்கள் தவிர்த்திருக்க வேண்டும். மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர்களின் கருத்து இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையற்றது’ என்று கூறியுள்ளார்.