நேபாளத்தில் மாயமான இந்திய மலையேற்ற வீரர், வீராங்கனை மீட்பு: மற்றொரு வீரரை தேடும் பணி தீவிரம்

காத்மண்டு: இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 8,091 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் 10வது உயரமான மலை சிகரமாகும். இந்தியாவைச் சேர்ந்த பல்ஜித் கவுர்(27), அர்ஜுன் வாஜ்பாய்(29) மற்றும் அனுராக் மாலிக்(34) ஆகியோர் அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்றம் செய்தபோது மாயமாகினர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, பல்ஜித் கவுடர், அர்ஜுன் வாஜ்பாய் நேற்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனுராக் மாலிக் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இவர்களுடன் சென்ற யர்லாந்து நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னாவின் சடலம் மீட்கப்பட்டது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்