மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மானநஷ்ட ஈடு கோரிய எடப்பாடி பழனிசாமி வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு..!!

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மானநஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் வரும் 30, 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி பழனிசாமி சாட்சியம் அளிக்க உள்ளார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி ஆஜராகுவதாக கூறியதை அடுத்து வழக்கை பிப்.8க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்