இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து இன்றே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளது. மணிப்பூரில் கலவரம், பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர். மணிப்பூர் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து உடனடியாக விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் முழக்கம் எழுப்பினர். தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.