இதற்கு முன்பணமாக விஜயகுமார் ஒரு லட்ச ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. வேலை முடிந்ததும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவதாக ரித்தன்யா கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட விஜயகுமார் மாம்பலம் காவல் நிலையத்தில் ரித்தன்யா மீது கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு சம்பந்தமாக சென்றபோது தியாகராய நகர் போலீசார் தகவலின் பேரில் ரித்தன்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.