மாம்பலம் – தி.நகர் வரையிலான ஆகாய நடைபாதை 2 நாட்களுக்கு மூடல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னை: மாம்பலம் ரயில்நிலையம்-தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் நகரும் படிகட்டில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆகாய நடைபாதையில் ஜூன் 13 முதல் மாதாந்திரப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் மக்கள் படிக்கட்டுகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகளில் ஜூன் 13-ல் காலை 10 முதல் 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஜூன் 14-ல் காலை 10 -பிற்பகல் 1 மணி வரை தெற்கு உஸ்மான் சாலை மின் தூக்கியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஜூன் 14 பகல் 2 மணி-5 மணி வரை மார்க்கெட் சாலை ரயில் நிலைய மின் தூக்கியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் நாளில் மக்கள் வழக்கம் போல் படிக்கட்டுகளை மக்கள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு