இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர் வெளிநாட்டில் வைத்து பெருமளவு கருப்புப் பணத்தை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 தயாரிப்பாளர்களிடமும் வருமானவரித்துறையும், அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த 3 தயாரிப்பாளர்களும் கடந்த சில வருடங்களில் ஏராளமான மலையாளப் படங்களை தயாரித்துள்ளனர். இதுபற்றியும் விசாரணை நடக்கிறது.
* போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
மலையாள சினிமாவில் பெருமளவு போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக நாத் பாசி மற்றும் ஷேன் நிகம் ஆகிய 2 இளம் நடிகர்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை பெற்று தயாரிக்கப்படும் படங்களின் படப்பிடிப்புத் தளங்களில் தான் பெருமளவு போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒன்றிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.