மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மஹாவீர் ஜெயந்தி தினம் (21ம்தேதி) அன்றும், மே தினம் (1ம்தேதி) அன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என அனைத்தும் மஹாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு