2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி அறிவித்த கருப்பு பணம் ஒழிப்பு, அனைவரது வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் செலுத்துவேன் உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து வங்கி முன் பல மணி நேரம் மக்களை வரிசையில் நிற்க வைத்தார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதனையும் செய்யவில்லை.
காஸ் சிலிண்டர் விலையை 400ல் இருந்து 1000 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் குறைக்கப்படும் எனத் தேர்தல் நேரத்தில் பாஜ அறிவித்துள்ளது. இதுவும் ஏமாற்று வேலைதான். ஆனால், திமுக அரசு பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது.
இதுபோன்ற மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.
வாக்கு சேகரிப்பின் போது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.