மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக மேலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பல்கலை., செக்கானூரணி வழியே செல்லும் பேருந்துகள் பல்கலை. பேருந்து நிறுத்தத்தில் நிற்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு ஐகோர்ட்கிளை வழக்கை ஒத்திவைத்தது.