சென்னை: சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.