மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவை பொறுத்தவரை அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூரில் இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். குடும்பத்தினருடன் வந்த பினராயி விஜயன், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதேபோல் கர்நாடகாவை பொறுத்தவரை 14 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தனது வாக்கினை பதிவு செய்திருக்கிறார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு