பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கும் போது மட்டுமே, உலகம் தன்னிறைவு பெரும் என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார். மார்ச் 3ம் தேதி ‘உலக வனவிலங்கு தினம்’ என்பதால், வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளாக டிஜிட்டல் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் முயற்சியால், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவின் சந்திரபுர் புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை 250-க்கும் மேல் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். அதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு எனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இருக்காது’ என்றார்.