இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, மணீஷ் சிசோடியா மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.