சண்டிகர்: பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 11.23 மணிக்கு ஏற்பட்ட நிலஅதிர்வு ஒருசில நொடிகள் மட்டுமே நீடித்தது. ஏற்கனவே இமயமலையின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நில அதிர்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.