குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

நீலகிரி: குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணி என்பவர் காயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற, கொள்ளையன் மணி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது காயம் அடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுபான திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது கத்தியால் தாக்கியதால் இருவரில் ஒருவரை தொடைக்கு கீழ் சுட்டு பிடித்துள்ளனர்.

Related posts

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து