கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து உயர்த்தப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணை நீர்வரத்து 400 கன அடியாக உயர்ந்ததால் 51 அடியை எட்டியது.