சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண் நண்பர் தாக்கியதில் இளம்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட்டால் தாக்கியதில் மயங்கிய இளம்பெண்ணை மீட்டு இளைஞர் மருத்துவமனையில் சேர்த்தார். மேம்பாலத்தில் இளம்பெண் மயங்கி கிடந்த வீடியோ வைரலான நிலையில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. கோயம்பேடு மேம்பாலம் வழியாகச் சென்றவர்கள் ஆன்லைனில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.