கொடைக்கானல்: கொடைக்கானல் – பழநி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த வனத்துறையினர் போராடி காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர்.