நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 358 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 300 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2669 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 2341 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.